Friday 26th of April 2024 05:01:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் கருத்தரங்கம் கருத்து மோதலாக வெடித்தது!

வவுனியாவில் கருத்தரங்கம் கருத்து மோதலாக வெடித்தது!


வவுனியாவில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் இறுதியில் சிறிரெலோ கட்சியினர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆதரவாளர்களுக்கு இடையில் கருத்து மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்குகொண்டு தமது நிலைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பர் என்று ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் வேட்பாளர்கள் சிவசக்தி ஆனந்தன், காதர் மஸ்தான், உதயராசா, சிவ.கஜேந்திரகுமார் உட்டவர்கள் பங்குகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தனர்.

நிகழ்வின் நெறியாளர் தவிர்ந்த ஏனையவர்கள் பேச்சாளர்களிடம் இடையில் கேள்வி கேட்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் காதர் மஸ்தானிடம் அங்கிருந்த சிறீ ரெலோ கட்சி ஆதரவாளர்கள் என கருதப்படுகின்ற பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியதால் இரண்டு தரப்புக்கும் இடையில் கருத்து மோதல் வெடித்தது. இருப்பினும் கை கலப்பு தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE