Friday 26th of April 2024 10:09:33 PM GMT

LANGUAGE - TAMIL
.
வடபகுதி கடலில் 420 கிலோ கேரள கஞ்சா மீட்பு: ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் சரண்!

வடபகுதி கடலில் 420 கிலோ கேரள கஞ்சா மீட்பு: ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் சரண்!


வடபகுதி கடலில் 420 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் இன்று யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக, யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று (ஜூலை-4) சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 420 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் பொதிகள் நேற்றைய தினம் (ஜூலை-3) கடற்படையினரால் மீட்கப்பட்டது.

வழமையான கடல் ரோந்து நடவடிக்கையில் மண்டைதீவு கடற்படையினர் ஈடுபட்டிருந்த போதே குறித்த கேரள கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் நேற்று மாலை படகு எஞ்சின் ஒன்றையும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் சந்தேக நபரான குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE