இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (ஜூலை-4) புதிதாக மேலும் 2 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 2074 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையதினம் தொற்று உறுதியான ஐவரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டார் நாட்டில் இருந்து திரும்பிய 2 பேர், பங்களாதேஷ், மடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவ்வொருவர் என ஐவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளதை அடுத்து கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள சிகிச்சை நிலையங்களில் 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை