யாழ் மாவட்ட கிராம உத்தியோகத்தர் சங்கத்தினருக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது.
அரச அதிபருடனான சந்திப்பின் போது;;;
தற்போதைய நிலைமையில் கிராம உத்தியோகத்தர்களின் செயற்பாடு, கிராமஉத்தியோகத்தர்கள் கடமையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இன்றைய சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்ட தோடு கிராம உத்தியோகத்தரின் சங்கத்தினால் விடுக்கப்பட்ட சில கோரிக்கைகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.
இன்று காலை 11 மணியளவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரச அதிபருக்கு விளக்கினர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்