இலட்சக் கணக்கான பணம் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் இருவர் கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் வைத்து இன்று மு.பகல் 11.00 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா தொகையும் 1 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலீஸ் மா அதிபரின் விசேட பொலீஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய செயற்பட்ட பொலீஸார் இவர்களை கைது செய்ததுடன் பணம் மற்றும் கஞ்சா போதைப் பொருள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சிங்களர் எனவும் மற்றையவர் செல்வாநகரை சேர்ந்தவர் என்றும் பொலிஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி