கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மும்பை மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற்று வந்த இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.
அமிதாப் பச்சனின் மகன் அபிசேக் பச்சன் இத்தகவலை தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டதாவது,
எனது தந்தைக்கு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா எதிர்மறை முடிவு கிடைக்கப் பெற்றதை அடுத்து மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதாகவும், வீட்டில் ஓய்வில் இருப்பார் என்றும் தந்தை நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா