Friday 26th of April 2024 08:26:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
சூழலைப் பாதுகாக்கும் 'தூய்மையான வவுனியா நகரம் ' செயற்றிட்டம் ஆரம்பம்!

சூழலைப் பாதுகாக்கும் 'தூய்மையான வவுனியா நகரம் ' செயற்றிட்டம் ஆரம்பம்!


வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையினருடன் இணைந்து சூழலைப்பாதுகாக்கும் சமூக நலன் செயற்றிட்டமான “தூய்மையான வவுனியாநகரம்” எனும் செயற்றிட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் சமூக நலன் சார்ந்த செயற்றிட்டத்தின் கீழ் வவுனியா நகர்ப்பகுதிகளில் முக்கிய இடங்களில் வைப்பதற்காக முதற்கட்டமாக 36 குப்பை தொட்டிவைத்தல் மற்றும் அதனுடன் இணைந்தவாறான மரநடுகை செயற்றிட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தலைவர் எஸ் . சுஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வவுனியா நகர சபை தலைவர் இ .கௌதமன் , உப நகரபிதா கு . குமாரசாமி , செயலாளர் இ . தயாபரன் , நகரசபை உறுப்பினர் ரி . கே . இராஜலிங்கம் , வவுனியா பிராந்திய பிரதி சுகாதாரசேவைப்பணிப்பாளர் மகேந்திரன் , சுகாதாரவைத்திய அதிகாரி வைத்தியர் பிரிஸ்குறாஸ் , சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் டி சில்வா வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மானவடு . வர்த்தகர் சங்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர்கள் , வர்த்தகர்கள் , பொது அமைப்புக்கள் எனப்பலரும் கலந்து தொண்டனர்.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT
MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE