சமூகத்தில் ஒரு கொரோனா நோயாளி இருந்தாலும் ஆபத்து என்று தொற்று நோயியல் பிரிவுத் தலைவர் வைத்தியர் சுதாத் சமரவீர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நாட்டில் தற்போது பாடசாலை ஆரம்பித்தல் மற்றும் புதிய அமைச்சுகளின் கடமைகளை ஆரம்பித்தல் போன்ற செயற்பாடுகளால் மக்களின் நடமாற்றம் அதிகரித்தமை காரணமாக கொரோனாத் தொற்று மீண்டும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கொரோனா நோயாளி எவரும் இல்லை என்று கூறிவிட்டு நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. எனவே, கொரோனா வைரஸிலிருந்து மக்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளச் சுகாதார வழிகாட்டிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்" - என்றார்.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை