தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் என 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த மாணவனுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்கனை பகுதியில் உள்ள யாய 5 நவோத்யா விததியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்றும் 16 வயதுடைய மாணவனுக்கே நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி சுகாதார வைத்திய அதிகாரி சந்தியா அபேரத்ன தெரிவிதுள்ளார்.
கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக கடமையாற்றிய இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு தொற்று உறுதியான குறித்த இராணுவ அதிகாரியின் வீட்டுக்கு முன்பாக உள்ள வீட்டில் வசிக்கும் மாணவனுக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பாடசாலையைச் சேர்நத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 30 பேரை தனிமைப்படுத்த பிரதேச சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை