செஞ்சோலையில் கொல்லப்பட்ட மாணவிகள் நினைவான நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் வள்ளிபுனம் பகுதிக்குச் சென்றிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் செஞ்சோலை சந்திப் பகுதியில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்.
விமானக் குண்டுத் தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகளின் நினைவு நாள் இன்றாகும்.
இந்நிலையில் நினைவு வணக்க நிகழ்வினை முன்னெடுப்பதற்காக எம்.கே.சிவாஜலிங்கம் மற்றும் அவருடைய உதவியாளர்கள் இன்று செஞ்சோலை வளாகப்பகுதிக்கு சென்றிருந்தனர்.
இருந்தபோதிலும் அவர்களை பொலிஸார் வளாகத்திற்கு செல்ல முடியாது என்று தடுத்தமையால் செஞ்சோலை சந்திப் பகுதியில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியிருக்கின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு