Wednesday 8th of May 2024 03:38:52 PM GMT

LANGUAGE - TAMIL
.
எம்.ரி. நியூ டயமண்ட் கப்பல் பணிக்குழாமிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு!

எம்.ரி. நியூ டயமண்ட் கப்பல் பணிக்குழாமிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு!


அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த போது தீ விபத்திற்கு உள்ளான எம்.ரி. நியூ டயமண்ட் எண்ணெய்க் கப்பல் பணிக்குழாமிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.ரி. நியூ டயமண்ட் கப்பல் தலைமை மாலுமி உள்ளிட்ட பணி குழாமிடம் கப்பல் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபருக்காக மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் முன்வைத்த சமர்ப்பனங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பரிசோதனைகளுக்காக எம்.ரி. நியூ டயமண்ட் கப்பலிலுள்ள எண்ணெய் மாதிரியை பெற்றுக் கொள்ளுமாறு கடற் பாதுகாப்பு அதிகார சபைக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE