கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று செயற்பட்ட தாதியர்கள் 1000 போ் வரை உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தாதியர்களுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 1000 –க்கும் மேற்பட்ட தாதியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்புகள் அனைத்தும் சுவாச கோளாறு காரணமாக நடந்துள்ளன. கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரப் பணியாளர்களை காக்க அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சர்வதேச தாதியர் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான தாதியர்கள் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் தாதியர்களுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.
ஆகஸ்ட் 14-ஆம் திகதி நிலவரப்படி 44 நாடுகளில் 1,097 தாதியர்கள் இறந்துள்ளதாகவும் அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் முழுமையான தரவுகள் பெறுவதில் சிரமங்கள் இருந்ததால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11 ஆம் திகதி நிலவரப்படி பிரேசிலில் 351தாதியர்கள் கோவிட் -19 தொற்று நோயால் இறந்துள்ளனர். மெக்சிகோவில் 212 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, செப்ரெம்பர் 7-ஆம் திகதி வரையான தரவுகளிபடி அனைத்து வகையான சுகாதாரப் பணியாளர்கள் 7,000 பேர் இதுவரை தொற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக சர்சதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
எனினும் கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அல்லது இறந்த தாதியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் உலகளாவிய ரீதியான முறையான பதிவு எதுவும் இல்லை என தாதியர்களுக்கான சா்வதேச அமைப்பு கூறியுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்