திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் பிரதான காரியாலயம் இன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் கபில நுவன் அதுகொரள மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம் அசங்க அபேவர்தன மற்றும் பிரதேசசபை உருப்பினர்கள் அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.
காலை 10.27 மணியளவில் ஆரம்பமான சுப வேளையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரான கபில நுவன் அதுகொரள ஒப்பமிட்டு உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம்