தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகெலைக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைந் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவிக்குப் பிள்ளையான் நியமிக்கப்பட்டுள்ள கடிதத்தில் (ஓகஸ்ட் 10 ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையெழுத்திட்டுள்ளார்.
இன்று விசேட நீதிமன்ற அனுமதியுடன் சிறைச்சாலையில் இருந்து பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க அழைத்துவரப்பட்ட பிள்ளையான் பாராளுமன்றத்தில் வைத்து பிராதமர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மற்றொரு இணைத் தலைவராக கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட அளவில் அரச நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்தல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பொறுப்புக்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம்