இலங்கையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 7 பேர், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய 2 பேர், எத்தியோப்பியா மற்றம் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து திரும்பிய தலா ஒவ்வொருவர் என 11 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மேலும் 11 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 129 அக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 182 பேர் சிகிச்சை பெற்றுவருகையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை