Friday 26th of April 2024 02:59:23 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா தொற்று உறுதியான 11 பேர்: இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!

கொரோனா தொற்று உறுதியான 11 பேர்: இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!


இலங்கையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 7 பேர், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய 2 பேர், எத்தியோப்பியா மற்றம் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து திரும்பிய தலா ஒவ்வொருவர் என 11 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மேலும் 11 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 129 அக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 182 பேர் சிகிச்சை பெற்றுவருகையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE