முல்லைத்தீவிலும் 'தியாக தீகபம்' திலீபனின் 33வது ஆண்டு நினைவை முன்னிட்டு உணவுதவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் 'தியாக தீகபம்' திலீபனின் 33வது ஆண்டு நினைவை முன்னிட்டு, செல்வச் சந்நிதி முருகன் ஆலய சூழலில் முன்னெடுக்கப்பட இருந்த அடையாள உணவுதவிர்ப்பு போராட்டம் நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக னைவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து முன்னறிவுப்பு ஏதுமின்றி சாவகச்சேரியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் திடீர் ஏற்பாடாக குறித்த உணவுத்தவிர்ப்பு போராட்டம் காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும், 'தியாக தீகபம்' திலீபனின் 33வது ஆண்டு நினைவை முன்னிட்டு இன்று காலை விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்ளப்பட்டு அடையாள உண்ணாவிரதமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராசா உள்ளிட்ட பலர் இந்த அடையாள உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து குறித்த ஆலயத்திற்கு வெளியே காவல்துறையினர் நிறுத்தப்பட்டு கண்காண்ப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான்