தினசரி வாழ்க்கையில் நடைப்பயிற்சியை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி '100 நாட்கள் 10,000 அடிகள்' விழிப்புணர்வு நடைபயணம் இன்று கிளிநொச்சியில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
ஈ-குருவி கனடா அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த விழிப்புணர்வு நடைப்பயிற்சி இன்று 100வது நாளில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் இன்று காலை கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி வரை நடைபயிற்சியை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கனடா, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி