வவுனியாவில் இன்று காலை முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகள் மற்றும் பிரதான வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் விஷேட அதிரடி படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இன்று காலை 10 மணியிலிருந்து விஷேட அதிரடி படையினர் வவுனியா நகர் பகுதிகள் மற்றும் பூந்தோட்டம் பகுதிகளிலும் ரோந்தினை மேற்கொண்டிருந்ததுடன் பிரதான வீதி வழியாக ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதிக்கு சென்றிருந்தனர்.
அத்தோடு சந்தேகத்திற்கிடமான வாகனங்களை சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.
விஷேட அதிரடி படையினர் மோட்டார் சைக்கிள்களிலே ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா