Friday 26th of April 2024 10:24:21 AM GMT

LANGUAGE - TAMIL
.
தயாராகும் திரையரங்குகள்: தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் 3 திரைப்படங்கள்!

தயாராகும் திரையரங்குகள்: தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் 3 திரைப்படங்கள்!


கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் திறப்பதற்கான முன்னாயத்த வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 தமிழ்ப் படங்கள் திரைக்கு வரத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தியரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.

ஒக்டோபர் 15-ம் தேதி முதல் தியரையரங்குகளை திறக்கலாம் என இந்திய மத்திய அரசு அறிவித்திருந்தாலும் தமிழ்நாட்டில் அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இதனிடையே ஒக்டோபர் 22-ம் தேதி தமிழ்நாட்டில் தியரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய படங்களை வெளியீடு செய்வதற்கான பணிகள் தமிழ் திரையுலகில் வேகமெடுத்துள்ளன.

தியரையரங்குகள் திறக்கப்பட்டால் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மத்திய அரசு வெளியிட்டு இருப்பதால், முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

இருப்பினும் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர். மகன்’, அருள்நிதி - ஜீவா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’, சந்தோஷ் பி ஜெயக்குமாரின் ‘இரண்டாம் குத்து’ஆகிய 3 படங்கள் தீபாவளி வெளியீட்டை உறுதி செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE