காரைநகர் சைவ மகா சபையின் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த ஆண்டு காரைநகர் கிழக்கில் உருவாக்கப்பட்ட குளம் காரைநகர் கிழக்கு கமக்கார அமைப்பினரிடம் கையளிக்கப்பட்டது.
காரைநகர் கிழக்கு சைவ மகா சபைக்குளம் எனும் பெயருடன் கிளவனைக் கால்வாயை அண்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இக்குளத்திற்கான அனுசரணையை காரை பிரித்தானிய நலன் புரிச்சங்கத்தினர் வழங்கியிருந்தனர். இதே போன்று 2 ஆண்டுகளிற்கு முன்னர் காரை மேற்கு மற்றும் மத்திய பகுதியில் முல்லைப் பிளவிலும் நூற்றாண்டை முன்னிட்டு குளங்கள் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்