Friday 26th of April 2024 06:47:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியா தனிமைப்படுத்தல் மையத்தில் 20 பேருக்கு கொரோனோ!

வவுனியா தனிமைப்படுத்தல் மையத்தில் 20 பேருக்கு கொரோனோ!


வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கம்பகாவை சேர்ந்த 20 பேருக்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசியகல்வியற் கல்லூரி கோவிட்-19 தனிமைப்படுத்தல் நிலையமாக அண்மையில் மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் கம்பகா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலர் குறித்த மையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள 324 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோதனைகள் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 194 பேருக்கான பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தது. அதன்படி 20 பேருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE