மினுவாங்கொட கொத்தணியில் மேலும் 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்று 5685 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மினுவாங்கொட கொத்தணியில் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 2.30 மணி வரையான நிலவரங்களின் அடிப்படையில் இத்கதவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இன்று தொற்று உறுதியான 100 பேரில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 19 பேரும், ஊழியர்களுடன் தொடர்புபட்டவகையில் 81 பேரும் உள்ளட்ங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மினுவாங்கொட கொத்தணியில் இதுவரை தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 221 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இன்று மேலும் 17 பேர் குணமடைந்துள்ளதை அடுத்து இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 457 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 132 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தகது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை