யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் வெடிக்காத நிலையில் எறிகணைக் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தனியார் காணி ஒன்றில் குறித்த குண்டு காணப்பட்ட நிலையில் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதனை மீட்டு அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்