யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதிவிபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அச்சுவேலி நவக்கிரிப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது காரை செலுத்திச் சென்ற சாரதி தனபாலசிங்கம் லஷ்ச தீபன் (வயது 34) சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
அவருடன் பயணம் செய்த சரல தீபன்(வயது 23) பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், அச்சுவேலி, யாழ்ப்பாணம்