தென்மராட்சி சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான்கு நாட்களாக காய்ச்சல் நோயினால் அனுமதிக்கப்பட்டிருந்த வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்று திடீரென உயிரிழந்திருந்தார்.
குறித்த நபரின் சாரதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்