Friday 26th of April 2024 09:57:17 AM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறை; மாவீரர் நாளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு மீதான தீர்ப்பு நாளை!

பருத்தித்துறை; மாவீரர் நாளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு மீதான தீர்ப்பு நாளை!


மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை கோரி பருத்தித்துறை, காங்கேசன்துறை, நெல்லியடி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட வழக்கு விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூன்று பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த பொலிஸாரால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீளப்பெறப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்குத் தொடர்பில் இரு தரப்பு விவாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வழக்குத் தொடர்பிலான தீர்ப்பினை நாளை வழங்குவதாக அறிவித்து வழக்கினை ஒத்திவைத்தார்.

எதிராளிகள் தரப்பில் சட்டத்தரணிகள் மணிவண்ணன், சுகாஸ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE