கொரோனத் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ள மேலும் சில பகுதிகள் நாளை அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை, ஆட்டுப்பட்டித் தெரு, மட்டக்குளிய ஆகிய பகுதிகளும் கம்பஹா மாவட்டத்தில் ராகம மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளும் நாளை (நவ-30) அதிகாலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெல்லம்பிடிய காவற்துறை பிரிவுக்குட்பட்ட லக்சந்த செவன உத்தேச வீடமைப்பு திட்டம், சாலமுல்ல மற்றும் விஜயபுர கிராம அலுவலகர் பிரிவுகள் ஆகியன நாளை 5 மணி தொடக்கம் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு