Friday 26th of April 2024 08:39:24 AM GMT

LANGUAGE - TAMIL
.
கோவிட்-19 தடுப்பூசியை அங்கீகாரிக்கும் முதல் மேற்கு நாடாகிறது இங்கிலாந்து!

கோவிட்-19 தடுப்பூசியை அங்கீகாரிக்கும் முதல் மேற்கு நாடாகிறது இங்கிலாந்து!


கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கும் முதல் மேற்குலக நாடாக இங்கிலாந்து இடம்பெறவுள்ளது.

அங்கு மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அடுத்த சில நாட்களில் கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கவுள்ளது.

பைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய தடுப்பூசிகளுக்கு இங்கிலாந்தில் அங்கீகாரம் வழங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தடுப்பூசி விநியோகப் பணிகள் தொடங்கும் என்று அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதல் தடுப்பூசி இங்கிலாந்தில் அனேகமாக டிசம்பர் 7-ஆம் திகதி முதல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைசர் மற்றும் பயோஎன்டெக் கோவிட்19 தடுப்பூசியின் 40 மீல்லியன் சொட்டுக்களைப் பெற்றுக்கொள்ள இங்கிலாந்து ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் தடுப்பூசி கொரோனா தொற்று நோயைத் தடுப்பதில் 95 சதவீதம் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE