இன்று மேலும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது.
இலங்கையில் இன்று மேலும் 268 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்து 24 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இன்டறு மேலும் 257 பேர் குணமடைந்து வெளியேறியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து இதுவரை கொரோனாத் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 817 ஆக உயர்வடைந்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 6 ஆயிரத்து 320 ஆக உள்ள நிலையில் நேற்றைய தினம் இருவர் உயிரிழந்திருந்தமையால் மொத்த உயிரிழப்பு 118 ஆக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை