Thursday 25th of April 2024 09:52:29 PM GMT

LANGUAGE - TAMIL
-
கனகாம்பிகைக்குளம் வான் பாயக்கூடும் - கிளிநொச்சி மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கனகாம்பிகைக்குளம் வான் பாயக்கூடும் - கிளிநொச்சி மக்களுக்கு அவசர எச்சரிக்கை!


கனகாம்பிகைக்குளம் நீரேந்து பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அவசர அறிவித்தல் விடுத்துள்ளது.

கனகாம்பிகைக்குளம் கிட்டத்தட்ட 6 அடியை அண்மித்துள்ளது. அதன் கொள்ளளவு 10 அடி 6 அங்குலம்.

தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் அதிகாலை வாய் பாய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிததுள்ளது.

எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன், தற்போதைய கொரோனா சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு முதியவர்கள், மாற்றுவலுவுடையோர், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்களை அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு முன்கூட்டியே அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

என்று கிளிநொச்சி மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE