Friday 26th of April 2024 07:23:20 PM GMT

LANGUAGE - TAMIL
-
புயலின் தற்போதைய நிலை - காலநிலை அவதானி நா.பிரதீபராஜா

புயலின் தற்போதைய நிலை - காலநிலை அவதானி நா.பிரதீபராஜா


நிலப்பகுதியின் வளிமண்டல நிலைமை காரணமாகவும் காற்று முறிவின் காரணமாகவும் சற்று வலுக்குறைந்த புயலாகவே தரைப்பகுதிக்குள் நகரும் என எதிர்பார்க்கலாம் என்று யாழ்.பல்கலைக்கழக புவியியற்றுறை விரிவுயாளர் காலநிலை அவதானி நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

புரேவி புயல் முல்லைத்தீவுக்கு தெற்காக சுமார் 40 கி.மீ. தொலைவில் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. ஒரு ஆறுதலான விடயம் என்னவெனில் நிலப்பகுதியின் வளிமண்டல நிலைமை காரணமாகவும் காற்று முறிவின் காரணமாகவும் சற்று வலுக்குறைந்த புயலாகவே தரைப்பகுதிக்குள் நகரும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது கிடைக்கும் கனமழை நாளை அதிகாலை வரை தொடர்ச்சியாக கிடைக்கும். காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருக்கவும்.

மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் இற்றைப்படுத்தப்படும்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE