வெலிக்கடை சிறைச்சாலையில் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக இன்று (டிச-22) அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் 68 வயதுடைய ஆண் ஒருவரும், தர்கா நகரைச் சேர்ந்த ஆண் (வயது77), மக்கொன பிரதேசத்தைச் சேர்ந்த பெண் (வயது-63), கொழும்பு-10 ஐச் சேர்ந்த ஆண் (வயது-83) மற்றும் கொழும்பு-15 ஐச் சேர்ந்த ஆண் (வயது-55) உள்ளிட்ட ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 176 இல் இருந்து 181 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு