Friday 26th of April 2024 12:05:22 PM GMT

LANGUAGE - TAMIL
.
வெள்ளவத்தையில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீர் அதிகரிப்பு!

வெள்ளவத்தையில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீர் அதிகரிப்பு!


கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் (டிச-24) 592 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 245 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தை பகுதியில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு 48 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை ஸ்ரீ விஜய வீதி தோட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 100 பி.சி.ஆர் பரிசோதனைகளில் 20 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE