கொரோனாத் தொற்று உறுதியான நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து சில இடங்களில் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
எஹலியகொட பிரதேச செயலகப் பிாிவின் மின்னான, விலேகொட, யக்குதாகொட, அஸ்ககுல-வடக்கு, போபத்த ஆகிய கிராம சேவகர் பிாிவுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.
இதேபோல் கொடகவெல பிரதேச செயலகப் பிாிவின் ரக்வான நகரம், ரக்வான- வடக்கு, ரக்வான - தெற்கு, மஸ்ஸிபுல, கொட்டல ஆகிய கிராம சேவகர் பிாிவுகளும் உனடடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தொிவித்துள்ளார்.
இதேவேளை நாளை (டிச-28) காலை 5 மணியுடன் டேம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை ஆகிய காவல் துறை அதிகார பிரதேசங்கள், கொம்பனித் தெருவில் வேகந்த மற்றும் ஹுனுபிட்டிய கிராமசேவகர் பிாிவு, வெள்ளவத்தை-மயூரா வீதி, பொரள்ளை-ஹல்கஹவத்த மற்றும் காளிபுள்ளவத்த, வெள்ளம்பிட்டி லக்சந்த செவன வீடமைப்புத் திட்டம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.
இதற்கு மேலாக வாழைத்தோட்டம்-அளுத்கடை மேற்கு மற்றும் அளுத்கடை கிழக்கு கிராம சேவகர் பிாிவுகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படுமெனவும் அவர் மேலும் தொிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு