மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறி வெளிமாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் 54 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் ரெப்பிட் எண்டிஜன் முன்னெடுக்கப்படும் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பு, களுத்துறை, மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை அடுத்து மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களிடம் கொவிட் 19 தொற்று காணப்படலாம் என்ற சந்தேகத்தில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 18 ஆம் திகதியிலிருந்து மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு 11 இடங்களில் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையில் 8 ஆயிரத்து 600 பேருக்கு ரெப்பிட் எண்டிஜின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் ஆயிரத்து 100 பேருக்கு ரெப்பிட் எண்டிஜின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 5 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்படும் ரெப்பிட் எண்டிஜின் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுறுதியான 54 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மேல்மாகாணத்தில் வெளியேறும் பகுதிகளில் தொடர்ந்தும் ரெப்பிட் எண்டிஜின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு