கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து உடன் அமுலாகம் வகையில் கொழும்பில் மேலும் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு-15 முகத்துவாரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மூன்று வீதிகள் இன்று அதிகாலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் பிரகாரம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கமைய முகத்துவாரம் பகுதியில் உள்ள புனித - என்றூஸ் வீதி, புனித - என்றூஸ் மேல் மற்றும் கீழ் வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, முகத்துவாரம் காவல்துறை பிரிவு நீண்ட நாட்களாக முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அதிகளவான தொற்றாளர்கள் குறித்த பகுதியில் இனங்காணப்பட்டதையடுத்தே மீண்டும் முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு