முல்லைத்தீவு நகரில் உள்ள பியூட்டி பாலர் ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு நகரக் கடைகள் மூடப்பட்டு வர்த்தகர்களுக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு நகரில் கடை ஒன்றை வைத்திருக்கும் பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்று திரும்பியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் கள்ளப்பாடு கிராமத்தினைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் வட்டுவாகல் கிராமத்தினைச் சேர்ந்தவர் என்றும் இருவரும் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவில் சமூகத் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் கண்டறிவதற்காக முல்லைத்தீவு நகர் பகுதி வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு