Friday 26th of April 2024 09:58:14 AM GMT

LANGUAGE - TAMIL
.
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்காத 2,490 பேர் கைது!

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்காத 2,490 பேர் கைது!


கடந்த 24 மணிநேரத்தில் முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமை போன்ற குற்றச்சாட்டில் 28 பேர் கைதாகியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இன்று இதனைத் தெரிவித்தார்.

இந்த 28 சந்தேக நபர்களும் மேல் மாகாணத்துக்கு வெளியே உள்ள இடங்களில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் இன்றுவரை தனிமைப்படுத்தல் சட்டத்தை உதாசீனம் செய்த குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 490 பேர் கைதாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE