இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவர், தும்மல சூரிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவர், கல்கமு பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர், கிந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவர் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்