Friday 26th of April 2024 02:51:15 AM GMT

LANGUAGE - TAMIL
-
குருந்தூர் மலைக்கு கூட்டமைப்பு, முன்னணி எம்பிக்கள் பயணம்! ஊடகவியலாளர்களுக்குத் தடை!

குருந்தூர் மலைக்கு கூட்டமைப்பு, முன்னணி எம்பிக்கள் பயணம்! ஊடகவியலாளர்களுக்குத் தடை!


முல்லைத்தீவு மாவட்டத்தின் தொன்மையான கிராமங்களில் ஒன்றாகிய குருந்தூர் மலையில் புதிய கட்டுமாணம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம் ஆகியோரே குருந்தூர் மலைக்கு சென்றுள்ளனர்.

இருந்தபோதிலும் பொலிஸார் அங்கு செல்ல அவர்களுக்கு உடனடியாக அனுமதிக்கவில்லை என்ற போதிலும் நீண்ட இழுபறியின் பின்னரே அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,

ஊடகவியலாளர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் செல்ல முடியாது என்று இறுக்கமாகத் தெரிவித்த பொலிஸார் ஊடகவியலாளர்களை தடுத்துநிறுத்தியுள்ளனர்.

இதேவேளை,

குருந்தூர் மலையில் தொல்லியில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்து அந்தப் பகுதியில் கட்டட நிர்மாணப் பணி ஒன்றை முன்னெடுப்பதற்கான முயற்சி நடைபெற உள்ளதாகவும் நாளை, அமைச்சர் ஒருவர் அங்கு பிரச்சனமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தியிருக்கின்றமை குறித்து ஊடகவியலாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாளை அமைச்சர் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அமைச்சரின் பயணத்தின்போதும் ஊடகவியலாளர்கள் தடுத்துநிறுத்தப்படுவார்களா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE