முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தைப்பொங்கல் விழா ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் மற்றும் கிராமிய நிர்வாகக் கிளையினரின் ஒருங்கிணைப்பில் இன்று(18) காலை மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது அலுவலக ஊழியர்களால் கும்பம், பொங்கல் பானை வைக்கப்பட்டு கரும்பு, மாவிலை, தோரணங்கள், வாழைகள் என்பன கொண்டு கோலம் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு பூசை வழிபாடுகளுடன் மிகவும் பக்தி பூர்வமான முறையில் இடம்பெற்றிருந்தது.
இவ் விழாவில் மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு