Tuesday 7th of May 2024 08:54:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
முல்லைத்தீவின் குருந்தூர் மலையின் ஆதி ஐயனார் இருந்த இடத்தில் எழுந்தருளினார் புத்தபிரான்!

முல்லைத்தீவின் குருந்தூர் மலையின் ஆதி ஐயனார் இருந்த இடத்தில் எழுந்தருளினார் புத்தபிரான்!


முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் 1932 இல் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் இருந்ததாகத் தெரிவித்து இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புக்களுடன் தொல்லியல் திணைக்களத்தினரால் ஆய்வு நடவடிக்கைள் இன்று தொடங்கியுள்ளன.

இந்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இலங்கை இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் அகழ்வு நடவடிக்கையினைத் தொடங்கினர்.

இதன்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. ஜெயவர்த்தனபுர தொல்லிய பீடம், இராணுவத்தினர் தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்து குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

வன்னியில் பாரம்பரிய வழிபா்ட்டுத் தெய்வங்களில் ஒன்றாக விளங்கிய ஆதி ஐயனார் கோவில் குறித்த பகுதியில் இருந்ததாகவும் நீண்டகாலமாக மக்கள் அங்கு வழிபாடாற்றி வந்ததாகவும் வன்னியின் மூத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE