இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக ஆண்கள் ஐவர் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி,
கொழும்பு 03 பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும்,
கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரும்,
முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவரும்
தெற்கு களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும்,
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவரும்,
இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும்
என இவ்வாறு நேற்றைய தினம் (ஜன-18) உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு