வவுனியா பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் அப்பகுதியில் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று வெளியாகியது.
அதனடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 20 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.
குறித்த எண்ணிக்கையுடன் வவுனியாவில் 222 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை பதிவாகியுள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா