யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கொரோனா பரிசோதனைக் கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
311 பேருக்கு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்களில் 25 பேர் வவுனியா நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்டவர்கள் என்றும் ஏனைய ஐவரும் யாழ்.மாநகரசபைக்குள் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் எமக்குத் தெரிவித்தார்.
வவுனியாத் தொற்றாளர்கள் வவுனியா நகர் விற்பனை நிலையங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் யாழ்.மாநகரசபைக்குள் அடையாளம் காணப்பட்ட ஐவரும் கொழும்பிலிருந்து வந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை