யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான நடவடிக்கை மாணவர்களால் இன்று (ஜன-20) தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போராட்டம் நடைபெற்றிருந்த நிலையில் துணைவேந்தர் மாணவர்கள் சகிதிம் நினைவுத்தூபிக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
அண்மையில் பல்கலைக்கழக பொறியியலாளர்களினால் நினைவிடத்திற்கு அளவீடு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த தினத்தில் மாணவர்களால் அத்திவாரம் வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை மாணவர்கள் இணைந்து நினைவுத்தூபியை அமைப்பதற்கான கட்டுமாணப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்