கொழும்பின் பிரபல தனியார் தமிழ்த் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பில் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் குறித்த நியமனம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் உமாச்சந்திராவுக்கு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தென்மராட்சியின் மட்டுவில் கிராமத்தினைச் சேர்ந்த உமாச்சந்திரா பிரகாஷ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்.மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்