இலங்கையில் வேமாகப் பரவக்கூடிய புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பிறழ்வு வைரஸ் (B.1.258) முன்னர் இலங்கையில் காணப்பட்ட திரிபுகளிலிருந்து வேறுபட்டது.
அத்துடன் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் பரவும் வகையில் இருந்தும் இது வேறுபட்டதாக உள்ளது எனபேராசிரியர் டாக்டர் ஜீவந்தர இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய புறழ்வு கொரோனா வைரஸை் மிக வேகமாகப் பரவக்கூடியது எனவும் அவர் கூறினார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை