Tuesday 7th of May 2024 07:14:12 PM GMT

LANGUAGE - TAMIL
.
மூன்று இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குமாம் சீனா! - தூதரகம் அறிவிப்பு!

மூன்று இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குமாம் சீனா! - தூதரகம் அறிவிப்பு!


இலங்கைக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான 3 இலட்சம் தடுப்பூசிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.

சீனாவின் சினோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளே, இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன என்று சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியளவில் சீனாவின் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையுடன் நீண்ட கால நற்புறவைப் பேணி வரும் சீனா, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திலும் இலங்கைக்கு ஒத்துழைக்கவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் 20 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE