அமெரிக்காவில் இதுவரை கிட்டத்தட்ட 50 மில்லியன் மொடர்னா, பைசர் மற்றும் பயோஎன்டெக் கோவிட்-19 தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கிட்டத்தட்ட 30 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் சுமார் 24 மில்லியன் மக்கள் முதல் மற்று இரண்டாவது தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். நேற்று சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 5.3 மில்லியன் பேர் தமக்குரிய இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 3.5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் முதியோர் நீண்டகால பராமரிப்பு மையங்களில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா